வெள்ளகோவில் அருகே தனியார் துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு

வெள்ளகோவில் அருகே தனியார் துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு
வெள்ளகோவில் அருகே வேலப்ப நாயக்கன் வலசு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துணை மின் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் தனலட்சுமி இடம் பொதுமக்கள் நேற்று மனு கொடுத்தனர் அதில் கூறியிருப்பதாவது:- வேலப்ப நாயக்கன் வலசு ஊராட்சி மூத்தநாயக்கன்வலத்தில் தனியார் நிறுவனம் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது.

துணை மின் நிலையம் அமைய உள்ள இடம் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன ஆயக்காட்டுக்கு உட்பட்டதாகும். மேலும் விவசாய நிலங்கள் வழியாக பல கிலோமீட்டர் தூரத்துக்கு உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் வந்தால் விவசாயம் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படும் விவசாய நிலத்தை சட்டப்படி வகை மாற்றாமல் தனியார் நிறுவனம் கட்டுமான பணியை தொடங்கி உள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த நிறுவனம் அனுமதி கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்களின் நன்மையை கருதி ஊராட்சி நிர்வாகம் இதற்கு அனுமதி வழங்கக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது .

Tags

Next Story