ஆளுகின்ற கட்சிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது - ராஜேந்திர பாலாஜி

ஆளுகின்ற கட்சிக்கு எதிர்ப்பு  அலை வீசுகிறது -  ராஜேந்திர பாலாஜி

ஆலோசனை கூட்டம் 

ஆளுகின்ற கட்சிக்கு எதிர்ப்பு அலைவீசுவதாகவும், எம்ஜிஆர்,ஜெயலலிதாவை போன்று எடப்பாடியார் ஒரு தைரியசாலியாக இருக்கிறார் எனவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார் .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடந்தது. இதில் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு பொருளாளரும், பூத் கமிட்டி பொறுப்பாளருமான ஜான் மகேந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் தலைமை என்ன முடிவு எடுக்கும், எடப்பாடி என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை அரசியல் விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.எம்ஜிஆர், ஜெயலலிதாவை போன்று எடப்பாடியார் ஒரு தைரியசாலியாக இருக்கிறார். சரியான நேரத்தில் தேர்தல் வருகிறது. ஆளுகின்ற கட்சிக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது.இதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நாம் வெற்றி பெற்று எடப்பாடியார் கையில் ஒப்படைக்க வேண்டும்.வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் அதிமுக வெல்ல வேண்டும். எடப்பாடியார் ஆள வேண்டும்.என்றார் .

Tags

Next Story