மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் அஞ்சலி

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் அஞ்சலி

அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ் அணியினர்

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் அஞ்சலி செலுத்தினர்.

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அமைப்புச் செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ராஜ்மோகன், சாமிக்கண்ணு, ரத்தினவேல், அவைத்தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story