திருப்பூர் மாவட்டத்தில்19ஆம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில்19ஆம் தேதி விடுமுறை அளிக்க உத்தரவு

கோப்பு படம் 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வருகிற 19-ம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர்கள் உதவி ஆணையர் உத்தரவளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 19-ம் தேதிதொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு. திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வருகிற 19-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள்,

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி,

தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான வருகிற 19-ம் தேதி வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

என அனைத்து நிர்வாக சங்கங்கள் வேலையளிப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் உள்ளிட்ட அனைத்து அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான வருகிற 19-ம் தேதி அன்று வாக்களிக்கு ஏதுவாக விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

அந்த விடுப்பு நாளுக்கான ஊதியம், சாதாரண தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும் எனவும் அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வாக்குப்பதிவு நாளான்று பணிக்கு வராத பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து எவ்வித பிடித்தமும் செய்யக்கூடாது. மேலும் தேர்தல் நடக்கும் தொகுதியை சாராத பணியாளர்களுக்கும் அவர்களின் சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்க வசதியாக வாக்கு பதிவு நாளான வருகிற ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையரின் (அமலாக்கம்) நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் நாளான வருகிற 19-ம் தேதி மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் குறித்து பின்வரும் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம்.

ஜெயக்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தொலைபேசி எண் 9578777757, லட்சுமிகாந்தன், தொழிலாளர் துணை ஆய்வர் 9003312844, பேச்சிமுத்து, தொழிலாளர் உதவி ஆய்வர், முதல் வட்டம், திருப்பூர்(பொ) தொலைபேசி 9944258037. சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story