அத்துமீறி தாக்கிய போலீசாருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

அத்துமீறி தாக்கிய போலீசாருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

பைல் படம்

நெல்லையில் விசாரணையில் அத்துமீறி தாக்கப்பட்ட இருவருக்கு, தொடர்புடைய போலீசார் ரூ. 50,000 இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த மாரிமுத்து மனைவிக்கு நெல்லை மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வந்த மாரிமுத்துக்கும் அவரது சகோதரர் குடும்பத்தினருக்கும் தகராறு வந்துள்ளது.இதுகுறித்து விசாரணைக்கு சென்ற மாரிமுத்து,பேச்சிமுத்து இருவரையும் மாநகர போலீசார் தாக்கியுள்ளனர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையத்திடம் தொடுத்த வழக்கில் இருவருக்கும் தலா 50000 ரூ இழப்பீடு வழங்க நீதிபதி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story