சாலையோர வியாபார கடைகளை அகற்ற கூறியதை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் நகராட்சி ஆணையர் சாலையோர கடைகளை அப்புரப்படுத்த வேண்டி காலஅவகாசம் கொடுத்து அறிவிப்பை வெளிபிட்டார் இதனை தொடர்ந்து இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், அக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகளை கண்டுகொள்ளாமல் இருந்து கொண்டு, சாலையோர வியாபாரிகள் பதிக்கும் வகையில் நிர்வாகம் அறிவித்திருக்கும் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து,

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நவம்பர் 1ம்தேதி மாலை டாக்டர் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விசிக மாவட்ட செயலாளர் ரத்தினவேல் தலைமையில், நகராட்சியின் செயல்பாடு குறித்து கண்டித்து கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் டாக்டர் அம்பேத்கர் நடைபாதை வியாபாரிகள் சங்க, நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story