திருப்போரூர் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

திருப்போரூர் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
திருப்போரூர் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
திருப்போரூர் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம்,திருப்போரூர் பேரூராட்சி புதுத்தெருவை சேர்ந்தவர் அய்யப்பன், 34. இவர், தனியார் கார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அய்யப்பன், நேற்று முன்தினம் 2:00 மணியளவில் மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, சகோதரர் சரவணன், சகோதரி இன்பவள்ளி முன்வந்தனர். நேற்று, அய்யப்பனின் இரண்டு கண்கள், இரண்டு இதய வால்வுகள், இரண்டு சிறுநீரகங்கள், ஒரு கல்லீரல் ஆகிய, 7 உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றப்பட்டு, அதே மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

அவரது உடலுக்கு, செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயண சர்மா, திருப்போரூர் தாசில்தார் வெங்கட்ரமணன் உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story