செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கரில் இயற்கை வேளாண்மை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 ஏக்கரில் இயற்கை வேளாண்மை
 இயற்கை விவசாய திட்டம் 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டாரங்களில், 500 ஏக்கர் பரப்பளவில், பாரம்பரிய இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில், விவசாய நிலங்களில் நெல், உளுந்து, மணிலா உள்ளிட்ட பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், முழுமையாக விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, 2023- - 24ம் நிதியாண்டின் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் எட்டு வட்டாரங்களில், 500 ஏக்கர் பரப்பளவில், பாரம்பரிய இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண்ணும் நீரும் நச்சு தன்மைடைந்து, மனித வாழ்வு நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அவற்றை தவிர்க்கும் விதமாக, இயற்கையான எருவை பயன்படுத்தி, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லமால் வேளாண்மை செய்யும், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த வேளாண்மை வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடையும் நோக்கத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு, அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.



Tags

Next Story