தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் அமைப்பு தினக் கொடியேற்று விழா 

தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் அமைப்பு தினக் கொடியேற்று விழா 

கொடியேற்று விழா 

தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் அமைப்பு தினக் கொடியேற்று விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம், தஞ்சை ஒன்றியத்தின் சார்பாக, 40 ஆம் ஆண்டு துவக்கமான மாணிக்க ஆண்டு அமைப்பு தினக் கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

மாணிக்க ஆண்டின் துவக்கமாக கல்வெட்டுடன் கூடிய கொடிமரம் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கு ஒன்றிய தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஜே.பி.லதா வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சா.கோதண்டபாணி கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தி.ரவிச்சந்திரன் சத்துணவு ஊழியர் சங்க கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார். ஓய்வு பெற்ற ஒன்றியச் செயலாளர் சதாசிவம், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் தேசிங்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ரெங்கசாமி, அரசு ஊழியர் சங்க தஞ்சாவூர் வடக்கு வட்டச் செயலாளர் அஜய்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

சத்துணவு ஊழியர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உட்பட பல்வேறு துறைச் சங்கத் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக ஒன்றியப் பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Tags

Next Story