பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் வினியோகம்

பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் வினியோகம்
நாகர்கோவிலில் போக்குவரத்து பணியாளர்களுக்கு ஒ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் வினியோகம்
நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் கடும் வெப்பம் காரணமாக, மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்பட கூடும் என்பதால், உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டந்தோறும் பல்வேறு பகுதிகளில் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வினியோகம் செய்யப்படுகின்றன.

அதன்படி நாகர்கோவிலில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இவற்றை நீரில் கலந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் அருந்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி, துணை மேலாளர் ஜெரோலின் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் இதை கண்காணிக்கிறார்கள். முதற்கட்டமாக 1500 ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story