செஞ்சியில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கல்

செஞ்சியில் பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கல்

 ஓ.ஆர்.எஸ். கரைசல் குடிநீர் வழங்கல் 

செஞ்சி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கோடை வெப்பதை சமாளிக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசல் குடிநீர் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கோடை வெப்பதை சமாளிக்கும் வகையில் ஓ.ஆர்.எஸ். கரைசல் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் குடி நீர் வழங்கி, தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன் சிலர் அரங்க ஏழுமலை, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மணி வண்ணன், நகர செயலாளர் கார்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி பேரூராட்சி, கவுன்சிலர் சங்கர், நிர்வாகிகள் ரசூல் பாஷா, சோடா பாஷா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story