மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா

மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் 

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் முன்னாள் மின்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி , திருச்செங்கோடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் , திருச்செங்கோடு அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அணிமூர் மோகன் தலைமையில், ,தோக்கவாடி ஊராட்சி ஒன்றிய ஐடிவிங் நிர்வாகி அஸ்வின் ஏற்பாட்டில் திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 50 இளைஞர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

கட்சியில் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு கட்சி துண்டு அணிவித்து அவர்களுடைய பணிகள் சிறக்க முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வின் பொழுது , புதுப்புளியம்பட்டி கட்சி பொறுப்பாளர் உதயகுமார், தோக்கவாடி சாயப்பட்டறை சேகர், இந்திரஜித், மோனிஷ் கண்ணா, வருண், பிரபு ராம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், கழக பொறுப்பாளர்கள் என பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story