லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

லூர்து அன்னை ஆலய திருவிழா  கொடியேற்றத்துடன் துவக்கம்


தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி வடபாகத்தில் மிகவும் பழமை வாய்ந்த லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தின் ஆண்டு திருவிழா இன்று துவங்கியது. இந்த திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு ஜெபமாலை பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர்செல்வம் தலைமையில். மறைமாவட்ட முதன்மை செயலர். ஜாண்செல்வம், பங்குத்தந்தை அண்டனி புருனோ ஆகியோர் மாதாவின் கொடியை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

தொடர்ந்து கொடிக்கு ஜெபம் செய்யப்பட்டு கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் கைகளை தட்டியும் மரிய வாழ்க என தெரிவித்தோம் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை திருப்பலி நடைபெறுகிறது.

10ஆம் தேதி மாலை சிறப்பு ஆராதனை மறைமாவட்ட முன்னாள் முதன்மைகுரு செல்வராஜ், கீழவைப்பாறு பங்குத்தந்தை அந்தோணி ஜெகதீஷ் தலைமையில் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெருவிழா கூட்டத் திருப்பலி 11ஆம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு ஜான் பென்சன், தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அண்டனி புருனோ தலைமையில் அருட் சகோதரிகள், பங்கு பணி குழுவினர், இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story