கோல்டன் நகரில் புறக்காவல் நிலையம் அமைப்பு!

கோல்டன் நகரில் புறக்காவல் நிலையம் அமைப்பு!

காவல் நிலையம் (பைல் படம்)

திருப்பூர் கோல்டன் நகரில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
திருப்பூர் கோல்டன் நகர் கருணாகரபுரி பகுதியில் கடந்த 18-ந் தேதி வாலிபர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். மக்கள் அதிகம் உள்ள பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் கருணாகரபுரி பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடக்கு போலிஸ் நிலைய கட்டுப்பாட்டின் கீழ் இந்த புறக்காவல் நிலையம் செயல்படவுள்ளது. ரோந்து பணியையும் தீவிரப்படுத்த உள்ளனர்.

Tags

Next Story