நிரம்பி வழியும் மேல்நிலை தொட்டி - வீணாகும் குடிநீர்

நிரம்பி வழியும் மேல்நிலை தொட்டி - வீணாகும் குடிநீர்

வீணாகும் குடிநீர் 

மருதம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் வீணாகி வருவதை தடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம், மருதம் ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. ஆழ்துளை குழாயில் இருந்து இத்தொட்டியில் நிரப்பப்படும் குடிநீர், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி பராமரிக்கும், பம்ப் ஆப்பரேட்டர்கள் முறையாக பராமரிக்காததால், தொட்டி முழுமையாக நிரம்பி குடிநீர் வீணாக வழிவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், குடிநீர் வீணாகுவதோடு, மின்சாரமும் விரயமாகிறது. பல மணி நேரம் இயங்கும் மின்மோட்டாரும் விரைவில் பழுதடையும் சூழல் உள்ளது. எனவே, பம்ப் ஆப்பரேட்டர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பும் பணியை முறையாக கண்காணிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story