மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணி - பீலா வெங்கடேசன் ஆய்வு

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான  பணி  - பீலா வெங்கடேசன் ஆய்வு

ஆய்வில் ஈடுபட்ட பீலா வெங்கடேசன் 

ஓசூர் மாநகராட்சியில் ரூ.2.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுவரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா வெங்கடேசன் ஆய்வு செய்தார்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பீலா வெங்கடேசன் ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜுஜுவாடியில் 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ. 2 கோடியே 50 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 10 இலட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர், எரிசக்தி துறை மரு. பீலா வெங்கடேசன் , கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். உடன் ஒசூர் மாநகராட்சி ஆணையர் சினேகா, ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா ஆகியோர் பார்வையிட்ட நிலையில் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர் .

Tags

Next Story