மழைநீர் வெள்ளத்தில் கவிழ்ந்த வாகனங்கள்

மழைநீர் வெள்ளத்தில் கவிழ்ந்த வாகனங்கள்
மழைநீர் வெள்ளத்தில் கவிழ்ந்த வாகனங்கள்
மழைநீர் வெள்ளத்தில் கவிழ்ந்த வாகனங்கள்
மேடவாக்கம், பாபு நகர், வி.ஜி.பி., தெரு முதல் பிரதான சாலையில், 3 அடி உயரத்திற்கு, நேற்று காலை மழைநீர் தேங்கி நின்றது. மேடவாக்கம், செம்மொழி சாலையில், மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணி நடப்பதால், வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் பெரும்பாலான வாகன ஓட்டிகள், இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மழையில் அந்த சாலை முழுதும் நீர் தேங்கி நின்றதால், எது வழித்தடம், எது பள்ளம் என தெரியாமல், வாகன ஓட்டிகள் திகைத்து, மிகக் குறைந்த வேகத்தில் பயணித்து வந்தனர். அப்போது, வடமாநில பூண்டு வியாபாரி ஓட்டிச் சென்ற ஆட்டோ, சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில், சிறு காயங்களுடன் அவர் தப்பினார். பின், அதே சாலையில், பெண் ஒருவர் தன் குழந்தையை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் போது நிலை தடுமாறி விழுந்தார்.

Tags

Next Story