தொடர் மழையால் நிரம்பிய பேச்சிப்பாறை அணை

தொடர் மழையால் நிரம்பிய பேச்சிப்பாறை அணை

தொடர் மழையால் பேச்சிப்பாறை நிரம்பியதால் அணையில் இருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


தொடர் மழையால் பேச்சிப்பாறை நிரம்பியதால் அணையில் இருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்த்துவரும் மழை யின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவும் பரவலாக மழை பெய்தது. கோழிப்போர்விளை, களியல், குளித்துறை, முள்ளங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 65.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.ஏற்கனவே பேச்சிப்பாறை அணை முழுகொள்ளளவை எட்டி வரும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் பேச்சிப்பாறைஅணையிலிருந்து குடிநீருக் காக 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story