திருப்பத்தூர் அருகே வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்!

திருப்பத்தூர் அருகே  வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்!


திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான வெளி மாநில மது பாக்கெட்டுகள் பறிமுதல்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு சகாதேவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கலையரசன் கள்ளத்தனமாக வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்துக்கு அளித்த உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று கலையரசன் வீட்டில் சோதனை மேற்கொண்டதில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 18 பாக்ஸ் அளவிலான வெளி மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார். மேலும் போலீசார் வருவதை அறிந்த கலையரசன் தலைமறைவானார் மேலும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கலையரசனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story