மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் சேதம்

மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் சேதம்

மழையால் பயிகர்கள் சேதம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த கோடை நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருவோணம் தாலுகாவில், ஆழ்துளைக் கிணற்று நீரை பயன்படுத்தி, சுமார் 6 ஆயிரம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், உளுந்து, எள், கடலை, வாழைப் பயிர்களும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த திடீர் கனமழையால், தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளான காரியாவிடுதி, தளிகை விடுதி, பணிகொண்டான் விடுதி, நெய்வேலி தென்பாதி ஆகிய பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஆயிரம் ஏக்கர் கோடைப் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்நிலையில் தற்போது கடந்த 4 நாட்களாக வானம் இருண்டு, தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் நெல் பயிர்கள் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் பயிர்கள் அழுகி, நெல்மணிகள் முளை விடும் நிலை உள்ளது. மேலும் எள், உளுந்து பயிர்கள் முற்றிலுமாக அழுகி விட்டது.

எனவே, மாவட்ட நிர்வாகம், வேளாண் துறையினர், சேதமடைந்த நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை பார்வையிட்டு, சேதமடைந்த எள், உளுந்து, நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடும், வாழைப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story