வல்லம் கிராமத்தில் நெல் அறுவடை பணி தீவிரம்

கிருஷ்ணராயபுரம் அருகே வல்லம் கிராமத்தில் நெல் அறுவடை பணி தீவிரம் விவசாயிகள் மகிழ்ச்சி.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வல்லம் கிராமத்தில் நெல் அறுவடை பணி தீவிரம். கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, வல்லம், பிள்ளாபாளையம், லாலாபேட்டை, பகுதிகளில் பரவலாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். இதில் ஆந்திரா பொன்னி நடவு செய்யப்பட்டு, வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சபட்டது. தற்போது, நெல் வயில்களில் நெற்கதிர்கள் விளைந்துள்ளது. விளைச்சல் அடைந்த நெற்கதிர்கள் அறுவடை செய்யும் வகையில் விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். மேலும், அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில், கதிர் அடிக்கும் டிராக்டர் இயந்திரம் கொண்டு அறுவடை பணிகள் நடந்து வருகிறது. மேலும், நடப்பாண்டில் பாதிப்பின்றி நெல் மகசூல் கிடைத்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story