மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு !

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு !
விபத்து
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (31) இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக கடந்த ஒரு மாதமாக கோபிநாத் மனைவியை பிரிந்து தடிக்காரன் கோணத்தில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

கடந்த ஐந்தாம் தேதி கோபிநாத் தனது மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அழகிய பாண்டிபுரம் அருகே உள்ள மறுகால்தலை என்ற பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறு சாலை ஓரத்தில் விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று கோபிநாத் உயிரிழந்தார். புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story