மேளம் கொடுக்காததால் பெயிண்டருக்கு கத்திக்குத்து - 2 பேர் கைது

மேளம் கொடுக்காததால் பெயிண்டருக்கு கத்திக்குத்து - 2 பேர் கைது

கத்தி குத்து 

சேலம் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மேளம் கொடுக்காததால் பெயிண்டரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (24). பெயிண்டரான இவர் மேளம் அடிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் ஜான்சன்பேட்டையை சேர்ந்த கீர்த்திராஜா (23), அஜித் (24), ஜீவா (20) ஆகியோர் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மேளம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே காக்கையன் சுடுகாடு அருகே சீனிவாசன் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தயாராகி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கீர்த்திராஜா, அஜித், ஜீவா ஆகியோர் அவரிடம் தகராறு செய்தனர். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும் சீனிவாசனை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த சீனிவாசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சீனிவாசனை கத்தியால் குத்தியதாக அஜித், ஜீவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கீர்த்திராஜாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags

Next Story