சிவகாசி அருகே கண்மாயில் மிதந்த பெயின்டரின் உடல் மீட்பு

சிவகாசி அருகே கண்மாயில் மிதந்த பெயின்டரின் உடல் மீட்பு
சிவகாசி அருகே கண்மாயில் மிதந்த பெயின்டரின் உடல்....
சிவகாசி அருகே கண்மாயில் மிதந்த பெயின்டரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிறுகுளம் கண்மாயில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சிவகாசி கக்கன் காலனியை சேர்ந்த பெயின்டர் மனோஜ் குமார்(43) என்பது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story