மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

ஓவிய‌ போட்டி

செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத் துறையில் பணியாற்றி வரும் கே. கே ஐயாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கொடநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் சிறப்பு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சார்பாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் முதல் மூன்று பரிசுப் பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, நூல்கள் எழுதும் பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags

Next Story