கூழமந்தலில் சித்திரை பெருவிழா

கூழமந்தலில் சித்திரை பெருவிழா

சித்திரை பெருவிழா

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் மைதானத்தில், சித்திரை பெருவிழா விமர்சையாக நடைப்பெற்றது.

காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் மைதானத்தில், சித்திரை பெருவிழா நேற்று முன்தினம் இரவு 7:00 மணி முதல், நேற்று அதிகாலை வரை விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, கூழமந்தல் நட்சத்திர விருட்ச விநாயகர், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள் அபிஷேகமும் மற்றும் திருமஞ்சனமும் நடைபெற்றது. இதில் நட்சத்திர விருட்ச விநாயகர் மூஷிக வாகனத்திலும், விசாலாட்சி சமேத கங்கைகொண்ட சோழீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி சமேத பேசும் பெருமாள் கருட வாகனத்திலும் ஊர்வலமாகச் சென்று கூழமந்தல் மைதானத்தில் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதைத் தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளுக்கு 16 வகையான நறுமணப் பொருட்களால் விசேஷ அபிஷேகமும், மலர்களால் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அம்பாள், சிவபெருமான் மற்றும் பெருமாள் ஆகியோரை விநாயக பெருமான், வலம் வந்து ஆசீர்வாதம் பெற்று, கஜமுக அசுரனை வதம் செய்யும் உன்னத நிகழ்ச்சியும், உலகத்தைக் காக்க மும்மூர்த்திகளுக்கு அருளுரை வழங்கும் நிகழ்வும் விமரிசையாக நடந்தது. நிறைவாக மஹா தீபாராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில், கூழமந்தல் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்..

Tags

Next Story