மதுராந்தகத்தில் பால்குட ஊர்வலம்

மதுராந்தகத்தில் பால்குட ஊர்வலம்


மதுராந்தகத்தில் ஸ்வா்ண வாராகி பீடம், தனஆகாஷ்ண வாராகி கோயில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவை முன்னிட்டு, நேற்று 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.


மதுராந்தகத்தில் ஸ்வா்ண வாராகி பீடம், தனஆகாஷ்ண வாராகி கோயில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவை முன்னிட்டு, நேற்று 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

மதுராந்தகம் ரங்கன் தெருவில் உள்ள ஸ்வா்ண வாராகி பீடம், தனஆகாஷ்ண வாராகி கோயில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவை முன்னிட்டு, நேற்று 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு மதுராந்தகம் கடப்பேரி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க, 108 பெண்கள் பால்குடம் ஏந்தி செல்லும் ஊா்வலத்தை ஸ்வா்ண வாராகி பீடம் பீடாதிபதி மருத்துவா் எம்.செந்தில்நாதன் தொடங்கி வைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்த பால்குட குழுவினா் தன ஆகாஷ் வாராகி கோயிலில் மூலவா் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனா். மாலை பல்வேறு வேள்விபூஜைகள், மஹா தீபாராதனை, அலங்கரிக்கப்பட்ட உற்சவா் சிலை திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனா்

Tags

Next Story