பாலமார்த்தாண்டபுரம் அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா

பாலமார்த்தாண்டபுரம் அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா
பாலமார்த்தாண்டபுரம் அரசு பள்ளி கட்டிட திறப்பு விழா
பாலமார்த்தாண்டபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
பாலமார்த்தாண்டபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நேற்று பால மார்த்தாண்ட புரம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சிவசக்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பூங்கொடி கலந்து கொண்டு பேசினார். கிளாங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கொ. சந்திரசேகரன் பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவ ருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிளாங்காடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள், கிளாங்காடு ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கரடிமுத்து, கால்நடை மருத்துவர் சிவக்குமார் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குனர்கள் மதிவாணன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளாங்காடு ஊராட்சி செயலாளர் எம்‌. இசக்கிமுத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

Tags

Next Story