அதிமுக முன்னாள் எம்எல்ஏ தந்தை மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்!

திருப்பூர் அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரனின் தந்தை மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்தார்.
திருப்பூரில் அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் தந்தை மறைவிற்கு அதிமுகவின் பொது செயலாளரும் , சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் இரங்கல் தெரிவித்தார். திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான குணசேகரன் தந்தை சுப்பிரமணியம் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அதிமுகவின் பொது செயலாளரும் , சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள குணசேகரன் இல்லத்தில் மறைந்த சுப்பிரமணியம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளரும் , எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story