வீரகனூரில் பால்குட ஊர்வலம்

வீரகனூரில் பால்குட ஊர்வலம்
பால்குட ஊர்வலம்
சேலம் மாவட்டம், வீரகனூரில், அங்காள பரமேஸ்வரி கோயிலில் மாசி திருவிழா பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூரில், அங்காள பரமேஸ்வரி கோயிலில் மாசி திருவிழா பூச்சாட்டு முதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நேற்று பால்குடம் ஊர்வலம் நடை பெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவேத நதியில் இருந்து பால்குடம் எடுத்த வந்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம்வழங்கப்பட்டது.

Tags

Next Story