சத்தி விநாயகர் கோவிலில் பால்குட ஊர்வலம்

சத்தி விநாயகர் கோவிலில் பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

திருக்கோயிலூர் சக்திவிநாயகர்கோயிலில் பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருக்கோவிலுார், என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. அதனையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று கோவிலை அடைந்தனர். பின், அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு உற்சவ மூர்த்தி வீதியுலா நடந்தது. கோவில் நிர்வாகி சக்திவேல், தொழிலதிபர்கள் தியாகராஜன், செல்வராஜ், கண்ணப்பன், டாக்டர் பால்ராஜ், சாந்திபால், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சுப்ரமணி திருவாணன், பிரபாகரன், நகராட்சி கவுன்சிலர் கலையரசி, அறங்காவல் குழுத் தலைவர் ஜெய்சங்கர், சிவசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story