பல்லடம் : பெண்ணை தாக்கிய செயின் பறித்த இருவர் கைது

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் பெண்ணை தாக்கி தங்கசெயினை பறித்து சென்ற ரெண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காரணம்பேட்டையில் சரண்யா என்பவர் மதியம் தன் வீட்டிற்கு நடந்து சென்ற போது பின்தொடர்ந்து வந்த இரண்டு பேர் சரண்யா வீட்டு அருகில் வந்த போது மிளகாய் பொடியை முகத்தில் தூவியும், அடித்தும் வீட்டின் உள்ளே கட்டிப்போட்டு அவரிடமிருந்து 3 சவரன் தங்கசெயினை பறித்துச் சென்றனர்.

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கச் செயினை பறித்த குற்றவாளிகளான இச்சிப்பட்டியைச் சேர்ந்த மோகராஜ் (25) தாமரைக்கண்ணன் (25) ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். பின்னர் தங்க நகைகளை மீட்டு குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story