பள்ளப்பட்டி : குர்பானிக்கு ஆடுகளை பிடிப்பதில் இஸ்லாமியர்கள் தீவிரம்.

தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக ஆடுகளை வாங்குவதில் பள்ளப்பட்டி பகுதி இஸ்லாமியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதியில், சுமார் 50,000 மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். ஜூன் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.இதனால், இஸ்லாமியர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒன்று முதல் மூன்று ஆடுகளுக்கு மேல் குர்பானி கொடுப்பது வழக்கம். தற்போது அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதி இஸ்லாமியர்கள் குர்பானிக்கு ஆடுகளை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதில் 12 கிலோவிலிருந்து 22 கிலோ வரை எடையுள்ள ஆடுகள் பதினைந்தாயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. குர்பானி நாள் நெருங்க நெருங்க விலை அதிகரிக்கும் என ஆடு வளர்க்கும் விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். ஆண்டுதோறும், பக்ரீத் பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக பள்ளப்பட்டியில் சிறப்பு ஆட்டு சந்தை நடக்கும். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆடு வியாபாரிகள், பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக, வளர்க்கப்பட்ட ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story