கடகத்தூரில் பாமக பிரச்சார பொதுக்கூட்டம்

கடகத்தூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி கடகத்தூர் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி ஆதரித்து நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் ராமதாசு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி நல்ல கூட்டணி உலக தலைவர்களுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்பார்.

தர்மபுரியில் பெண் வாக்காளர்கள் அதிகம் ஆண் வாக்காளர்கள் குறைவு. பெண்கள் நினைத்தால் ஆக்கவும் அழிக்கவும் முடியும். உங்கள் தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்தி இருக்கிறேன். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இளைஞர்கள் இந்த நாட்டில் விலை மதிக்க முடியாத சொத்துக்கள். இளைஞர்கள் இல்லையென்றால் நாடு இல்லை.இளைஞர்கள் எல்லாம் தொடர்ந்து மாம்பழம் சின்னத்திற்க்கு வாக்களிக்க பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை.பாட்டாளி மக்கள் கட்சி 10 இடங்களில் போட்டியிடுகிறது. மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிப்போம் என உறுதி கூறுங்கள் என கேட்டுக்கொண்டார்.இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஷ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில், மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story