வெங்காய பேட்டையில் ஓட்டு சேகரித்த பாமக வேட்பாளர்

வெங்காய பேட்டையில் ஓட்டு சேகரித்த பாமக வேட்பாளர்

திண்டுக்கல் வெங்காய பேட்டையில் தொழிலாளர்களுடன் சேர்ந்து பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா மாம்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.


திண்டுக்கல் வெங்காய பேட்டையில் தொழிலாளர்களுடன் சேர்ந்து பாமக வேட்பாளர் கவிஞர் திலகபாமா மாம்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் பாஜக கூட்டணி வேட்பாளராக பாமக சார்பில் கவிஞர் திலகபாமா போட்டியிடுகிறார். இவர் ஆத்தூர் பகுதியில் தெருவோரக் கடைகளில் வடைகளை சுட்டு,வியாபாரம் செய்து ஓட்டு கேட்டார்.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள வெங்காய பேட்டையில் தொழிலாளர்களுடன் சேர்ந்து வெங்காயம் தரம் பிரித்து மூடையில் அள்ளி கொட்டி மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது : பாட்டாளிகளின் உழைப்பை உன்னத பணியை அறிந்த ஒரே கட்சி பாமக தான். பாட்டாளி மக்கள் கஷ்டங்களை அறிந்ததினால் தான் நல்ல பிரதமர் வரவேண்டும். இந்த மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story