திமுக அரசின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரம்

கருங்குழி பேரூராட்சியில் திமுக அரசின் சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம்,கருங்குழி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திராவிட மாடல் அரசில் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி, பேரூராட்சி மண்ட தலைவர் தசரதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் கருங்குழி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் ஆகியோரை நேரடியாக சென்று சந்தித்து தளபதி ஸ்டாலின் ஆட்சி குறித்து அவர் செய்த சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் உரிமை மீட்க ஸ்டாலின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா கூட்டணி வெல்லட்டும் என்ற சுவரொட்டி ஒட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி அமைப்பாளர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story