அச்சக முகவரியில்லாத துண்டு பிரசுரங்கள்: திமுக நிர்வாகி மீது வழக்கு

அச்சக முகவரியில்லாத துண்டு பிரசுரங்கள்: திமுக நிர்வாகி மீது வழக்கு
பைல் படம்
ராஜாக்கமங்கலத்தில் அச்சக முகவரியில்லாத துண்டு பிரசுரங்கள் வழங்கிய திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் அச்சகத்தின் முகவரி மற்றும் செல்போன் நம்பர் இல்லாமல் கை சின்னம் அச்சிடப்பட்ட 800 துண்டு பிரசுரங்கள் அனுமதி இல்லாமல் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அதிகாரிகள் அதனை கைப்பற்றினர். இது குறித்து தேர்தல் பிறக்கும் படை அதிகாரி பிரியதர்ஷினி என்பவர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் வாகனத்தில் துண்டு பிரசுரங்கள் கொண்டு சென்ற மனவாளக்குறிச்சி திமுக பேரூர் நிர்வாகி ஐயப்பன் என்பவர் மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story