வைத்தீஸ்வரன் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் சகோபுர வீதி உலா

வைத்தீஸ்வரன் கோவிலில் பஞ்ச மூர்த்திகள் சகோபுர வீதி உலா

சகோபுர வீதி உலா

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் அருள்மிகு வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி பிரமோற்சவத்தை முன்னிட்டு  தெருவடைச்சான் என்கிற பஞ்ச மூர்த்திகள் சகோபுர வீதியுலா,முருகனுக்கு- யானை ஓடி  விளையாட்டு காட்டும் வைபவம், திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்மிகு தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் தலமாகவும் இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான இன்று பஞ்சமூர்த்திகள் தெருவடைச்சான் என்கிற சகோபுர வீதிஉலா நடைபெற்றது. கார்த்திகை மண்டபத்திலிருந்து பஞ்சமூர்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருள மகாதீபாராதனை உடன் வீதியுலா துவங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சகோபுபரத்தை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக திரளான பக்தர்கள் கும்மியடித்து விழாவை கொண்டாடினர்.இந்த சகோகோபுரம் நான்கு வீதிகளையும் சுற்றி வரும்போது முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு சகோபுரம் மட்டுமே மின்னொளியில் வீதிகளை சுற்றி வந்தது.வைத்தீஸ்வரன் கோவில் பொதுமக்கள், பக்தர்கள், குலதெய்வ வழிபாட்டினர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Tags

Next Story