குமாரபாளையத்தில் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தின சிறப்பு வழிபாடு

குமாரபாளையத்தில் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தின சிறப்பு வழிபாடு

வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

குமாரபாளையத்தில் வாராஹி அம்மனுக்கு பஞ்சமி தின சிறப்பு வழிபாடு நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை, மகேஸ்வரர் கோவிலில் பஞ்சமி நாளில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. நேற்று பஞ்சமி தினத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற்ற தேங்காயில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். வாராஹி அம்மன் குறித்து பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story