கருங்காலி வாராஹியம்மன் கோவிலில் பஞ்சமி உற்சவம்

கருங்காலி வாராஹியம்மன் கோவிலில் பஞ்சமி உற்சவம்

கருங்காலி வாராஹியம்மன் 

புலிவலம் கிராமத்தில் உள்ள கருங்காலி வாராஹியம்மன் கோவிலில் பஞ்சமி உற்சவம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள கருங்காலி வாராஹியம்மன் கோவிலில் வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கருங்காலி வாராகியம் மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனைகள் மற்றும் நாக ஆரத்தி நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் புலிவலம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு நெய்தீபம், தேங்காய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story