தீ வைத்ததில் குடிநீர் குழாய் சேதம் - சீரமைத்த ஊராட்சி நிர்வாகம்

தீ வைத்ததில் குடிநீர் குழாய் சேதம் - சீரமைத்த ஊராட்சி நிர்வாகம்

குடிநீர் குழாய்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூரில் குடிநீர் செல்லும் குழாய் பகுதியில் இன்று மதியம் சிலர் தீ வைத்ததில் குடிநீர் குழாய் சேதமடைந்தது. உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைத்த ஊராட்சி நிர்வாகம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைத்து புரத்தாக்குடி பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் குழாய் பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துள்ளனர்.இந்த தீயினால் குடிநீர் குழாய் சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்த ஊராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் குழாயை சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தனர்.

Tags

Next Story