நூலக கட்டிடத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி மன்ற கட்டிடம் - வாசகர்கள் அவதி

நூலக கட்டிடத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி மன்ற கட்டிடம் - வாசகர்கள் அவதி

நூலக கட்டிடத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி மன்ற கட்டிடம்

பழுதடைந்த கட்டிடம் கடந்தாண்டு இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டிடத்தை விரைவாக அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது
சிங்கம்புணரி அருகே நுாலக கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்படுவதால் வாசகர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர் ஊராட்சிக்கான ஊராட்சி அலுவலக கட்டடம் பழுதடைந்ததன் காரணமாக கடந்தாண்டு இடிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடம் நீர்நிலை புறம்போக்கு என்பதால் அங்கு மீண்டும் கட்டடம் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அருகே உள்ள கிராம நுாலகத்தில் ஊராட்சி அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு ஏற்கனவே புத்தகங்கள் நிரம்பியுள்ள நிலையில் இட பற்றாக்குறையால் வாசகர்கள் புத்தகங்களை எடுத்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை வசதிகள் இல்லாமல் ஊழியர்களும் அவதிப்படுகின்றனர்.எனவே ஊராட்சியில் வேறொரு இடத்தை தேர்வு செய்து அல்லது ஊராட்சி அலுவலகம் கட்டடம் கட்ட அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story