பழுதடைந்த நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம்

போச்சம்பள்ளி அருகே பழுதடைந்த நிலையில் இருக்கும் அரசம்பட்டி ஊராட்சி மன்றம் அலுவலகத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி ஊராட்சியில் உள்ள அரசம்பட்டி, மஞ்சமேடு, பென்றஹள்ளி உள்ள கிராமத்தில் 2000 ஆயிரம் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் தேவைக்காக அரசம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது அரசம்பட்டி ஊராட்சி மன்றம் பழுதடைந்து உள்ளது. இந்த அலுவலகம் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.பல ஆண்டுகளாக அவ்வப்போது இந்த கட்டிடத்தை புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டிடம் முழுவதும் வெளிப்புறம் மற்றும் உள்புறத்தில் விரிசல் ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயா்ந்து விழுந்து வருகிறது. நேற்று திடீர் என்று மதியம் அலுவலகம் முன்பு மேல் பகுதி காரை பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது அலுவலகத்தில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story