ஆரத்தி எடுத்த பெண்களுக்கு சலவை ரூபாயை வழங்கிய ஊ.ம.தலைவர்

ஆரத்தி எடுத்த பெண்களுக்கு சலவை ரூபாயை வழங்கிய ஊ.ம.தலைவர்

பணம் வழங்கியதால் பரபரப்பு 

வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு சலவை ரூபாய் தாள்களை வழங்கிய ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளரான கார்த்திக் சிதம்பரம் மானாமதுரை தாலுகாவிற்க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றார். இடைக்காட்டூரில் பரப்பரை மேற்கொள்ள வந்த கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆரத்தி தட்டுகளுடன் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்து திமுக அரசின் சாதனைகளையும், பாஜக அரசின் வேதனைகளையும், எடுத்து கூறி பிரச்சாரம் செய்தார்.

வாக்காளர்களை தனக்கு கைச்சினத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர் சென்ற பிறகு அவர் வருகைக்காக நின்று கொண்டிருந்த பெண்களுக்கு, ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், 50 ரூபாய் சலவைத் தாள்களை அனைவருக்கும் வழங்கினார். தேர்தல் நடத்தை விதிமுறைக்கு மீறி தொடர்ந்து பண பட்டுவாடா செய்யப்பட்டு வருவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

Tags

Next Story