ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினம் - மரக்கன்றுகள் நடும் விழா

ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினம் - மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடவு 

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 30 ஆம் தேதி ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டாட்சியர் வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர். வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உமா, சரவணன், பிரபாகரன், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பூபாலன், ஊராட்சி முன்னாள் துணை தலைவர் ராஜேந்திரன், ஆகியோர் நாவல் மரக்கன்றுகளை நட்டனர். இதில் ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story