ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ரூ.1 லட்சம் நிவாரண நிதி

ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்  ரூ.1 லட்சம் நிவாரண நிதி

நிவாரண நிதி 

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் தொகையினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கற்பகத்திடம் வழங்கினார். மேலும், ஜி.டி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் உரிமையாளர் பிரபாகரன் ரூ.1 லட்சம் தொகையினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். வடகிழக்குப் பருவமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் நிதி உதவி வழங்கியவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மனதார நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

Tags

Next Story