ஊராட்சி ஒன்றிய பெண் உதவியாளர் தூக்கு போட்டு தற்கொலை

ஊராட்சி ஒன்றிய பெண் உதவியாளர் தூக்கு போட்டு தற்கொலை

தற்கொலை

ஊராட்சி ஒன்றிய பெண் உதவியாளர் 5 மாத கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் மனைவி ராஜேஸ்வரி (28). தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும், தற்போது 5 மாத கர்ப்பிணியாகவும் ராஜேஸ்வரி இருந்து வருகிறார். ரஞ்சித் தற்போது வெளிநாட்டில் இருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். நேற்று கிறிஸ்மஸ் ஒட்டி ரஞ்சித் வெளியில் இருந்து சாப்பாடு வாங்கி வந்துள்ளார். அதை ராஜேஸ்வரியிடம் சாப்பிட கூறியுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் ராஜேஸ்வரி வீட்டின் மாடிக்கு சென்றவர், வெகு நேரமாகிய கீழே இறங்கி வரவில்லை. கணவர், உறவினர்கள் மேலே சென்று பார்த்த போது அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே பூட்டி இருந்த கதையை உடைத்து உள்ளே சென்று, அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story