பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோயில் தேர் திருவிழா

பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் தேர் திருவிழா மிக விமர்சியாக நடைபெற்றது.

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் புதுப்பாளையம் மகாமாரியம்மன் கோயில் தேர் திருவிழா கடந்த 12-ஆம் தேதி இரவு கிராம சாந்தி,கம்பம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழாவுடன் தொடங்கியது. 13-ஆம் தேதி முதல் 16- ஆம் தேதி வரை தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 17-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவும், ஞாயிற்றுக்கிழமை மறு காப்பு கட்டுதலும் நடைபெறுகிறது.

திங்கட்கிழமை முதல் வரும் 25-ஆம் தேதி வரை அம்மன் தினந்தோறும் இரவு சிம்மம், ரிஷபம், அன்னபட்சி, காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முக்கிய விதிகள் வழியாக திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26-ஆம் தேதி மாலை வடிசோறு, மாவிளக்கு மற்றும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்வுளான தேர்த்திருவிழா நடைபெற்றது.

அம்மன் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் அம்மன் ரதம் ஏறுதலும், இரவு மகா மாரியம்மன் தேர் திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து ஓம் சக்தி பராசக்தி என்று கோசத்துடன் முக்கிய வீதி வழியாக இழுத்து சென்றனர் அப்பொழுது மேளதாளங்களுக்கு ஏற்றவாறு இளம் பெண்கள் இளைஞர்கள் சிறுவர்கள் என குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தேரை இழுத்து வந்து மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தது இன்று மாலை 28-ஆம் தேதி மாலை குண்டம் இறங்கும் விழாவும், பெண்கள் பூவாரி போட்டுக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ஆம் தேதி பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும், அக்னி சட்டி எடுத்தல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

30-ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு செல்லுதலும், கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 1-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 2-ஆம் தேதி காலை 6 மணிக்கு யாக பூஜை, அன்னபாவாடை மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. மேலும் திருவிழா ஏற்பாடுகளை கோவில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Tags

Next Story