மட்டியூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா முன்னிட்டு தீமிதி விழா

மட்டியூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா முன்னிட்டு தீமிதி நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் மட்டியூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழா முன்னிட்டு தீமிதி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம் மட்டியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டு இவ்விழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான இன்று பால்குடம், சக்தி கரகம், வேல், காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து ஆலயம் வந்தடைந்தது. மாலை தீமிதி திருவிழாவில் பத்து நாட்கள் விரதம் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்குதல் எனும் தீமிதி நிகழ்ச்சியில் பங்கேற்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். தீமிதி திருவிழாவை காண சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாளை மஞ்சள் நீராட்டு விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story