சிவகாசியில் பங்குனி மாத பிரதோஷ விழா

சிவகாசியில் பங்குனி மாத பிரதோஷ விழா

சிவகாசியில் பங்குனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.


சிவகாசியில் பங்குனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்று பகுதிகளிலுள்ள சிவன் ஆலயங்களில் பங்குனி மாத பிரதோஷ விழா அதிவிமர்ச்சியாக நடைப்பெற்றன.சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்ரீகருநெல்லிநாத,ஸ்ரீமீனாட்சி அம்பிகை திருக்கோவிலில் பங்குனி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பக்தர்கள் கொண்டு வந்த காணிக்கை பொருளான பால்,தயிர்,இளநீர்,பன்னீர், சந்தனம், மஞ்சள் மற்றும் வாசன திரவியங்களை அபிஷேகம் செய்யப்பட்டு, நந்தி பகவானுக்கு சந்தன காப்புடன் வெள்ளி கவசம் அணிந்து வித,விதமான வண்ண,வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மேளம், தாளம் முழங்க சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன,மேலும் சிவகாசி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான சிவன் பக்தர்கள் கலந்து நந்தி பகவானை வணங்கி சென்றனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.

Tags

Next Story